திருப்பதி பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்


திருப்பதி பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x

திருப்பதி பிரம்மோற்சவ திருவிழாவை ஒட்டி, பக்தர்கள் வசதிக்காக தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது;

"இந்த வருடம் 2023-ல் திருப்பதி திருமலையில் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு வரும் 13-10-2023 முதல் 28-10-2023 வரை சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது.

மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in - tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story