விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி உடலுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி


விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி உடலுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 6 April 2024 4:18 PM GMT (Updated: 6 April 2024 4:19 PM GMT)

விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நல குறைவால் இன்று காலமானார்.

கடலூர்,

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அத்தியூர் திருவாதியை சேர்ந்தவர் புகழேந்தி (வயது71). தி.மு.க. மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடியின் நெருங்கிய நண்பரான இவர் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார்.

நேற்று இரவு புகழேந்திக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். புகழேந்தியின் மறைவிற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக புகழேந்தியின் உடல் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்தது. புகழேந்தியின் உடலுக்கு கண்ணீர் மல்க தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடலூரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், பிரசாரக் கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து நேரடியாக காரில் விழுப்புரத்திற்கு வருகை தந்தார். கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள புகழேந்தியின் உடலுக்கு, மு.க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அப்போது அருகில் இருந்த புகழேந்தியின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.


Next Story