டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 24 April 2024 12:27 PM GMT (Updated: 24 April 2024 12:32 PM GMT)

நடப்பாண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்.1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேவைக்கு ஏற்ப குரூப் 1, 2, 3, 4 என பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் முதலிய பணிகள் குரூப்-1 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இந்த நிலையில், நடப்பாண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்.1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, ஜூன் 9ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story