புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் மற்றும் போலீசார் பரம்பூர் கடைவீதி பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பெட்டிக்கடை உரிமையாளர் பரம்பூரை சேர்ந்த உதயக்குமார் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





