புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

திருப்புவனம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த பசியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது 15 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





