தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


தூத்துக்குடி மாவட்டத்தில்  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 21 Dec 2023 1:06 PM GMT (Updated: 21 Dec 2023 4:16 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பெருமழை பாதிப்பு காரணமாக ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. சாலைகள் மழை, வெள்ளத்தால் சேதமடைந்து உள்ளது. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (22.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு காரணமாக தொடர்ந்து 5-வது நாளாக நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.


Next Story