திருச்சி: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் சிசு உயிரிழந்த விவகாரம்; உறவினர்கள் போராட்டம்


திருச்சி:  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் சிசு உயிரிழந்த விவகாரம்; உறவினர்கள் போராட்டம்
x

திருச்சியில் திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் சிசு உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருச்சி


திருச்சியில் திருவெறும்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்ரீநிதி (வயது 26) என்ற கர்ப்பிணி பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.

ஆனால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்த நேரத்தில் மருத்துவர் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஸ்ரீநிதிக்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இந்த சூழலில், சிசு உயிரிழந்து உள்ளது.

எனினும், சிசு இறந்து 3 மணி நேரமாகியும் அதுபற்றி தெரிவிக்காமல் இழுத்தடித்து உள்ளனர் என்று பெற்றோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் திரண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story