லாரி மோதி சில அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்டார்: ஆட்டோ டிரைவர் உடல் சிதைந்து சாவு


லாரி மோதி சில அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்டார்: ஆட்டோ டிரைவர் உடல் சிதைந்து சாவு
x

அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே லாரி மோதி சில அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை

சென்னை ஐஸ்அவுஸ் முருகப்பா தெருவை சேர்ந்தவர் பரத் (வயது 50). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி, திடீரென இவரது ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ முற்றிலுமாக சேதமடைந்து தலைகுப்புற கவிழ்ந்தது. ஆட்டோ கவிழ்ந்த வேகத்தில் அதன் டிரைவர் பரத், சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ஆட்டோ டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான ராணிப்பேட்டையை சேர்ந்த லோகநாதன் (38) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story