அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் - விரைவில் நிரப்ப ஆசிரியர் சங்கம் கோரிக்கை


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் - விரைவில் நிரப்ப ஆசிரியர் சங்கம் கோரிக்கை
x

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை,

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரம் காலி பணியிடங்களில் தற்காலிக ஆசியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதில், இதுவரை 2 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். 11 ஆயிரம் ஆசிரியர்கள் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை.

இதில் சுமார் 4 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ள சூழலில், பொதுத்தேர்வு இருப்பதால் ஆசியர்கள் காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகலை ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story