சென்னை-மைசூரு இடையே 'வந்தே பாரத்' சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கம்


சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கம்
x

பயணிகளின் நலனுக்காக சென்னை சென்டிரல்-மைசூரு இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று (3-ந்தேதி) முதல் வரும் 31-ந்தேதி வரை சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மைசூரு செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06037) அதேநாள் மதியம் 12.20 மணிக்கு மைசூரு சென்றடையும். மறுமார்க்கமாக, அதே தேதிகளில் மைசூருவில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரெயில் (06038) அதேநாள் இரவு 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

இதேபோல, வரும் 7-ந்தேதி மற்றும் 14-ந்தேதி சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு கோட்டயம் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் (06091) மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடையும். மறுமார்க்கமாக, வரும் 8-ந்தேதி மற்றும் 15-ந்தேதி கோட்டயத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரெயில் (06092) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story