'எதிர்கட்சிகள் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்' - திருமாவளவன்


எதிர்கட்சிகள் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் - திருமாவளவன்
x

எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை,

பெங்களூருவில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது;-

"காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் பா.ஜ.க. எதிர்ப்பு கட்சிகளின் அனைத்துக் கட்சிக் கூட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்க அழைப்பு விடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார். அவரது அழைப்பை ஏற்று எதிர்கட்சிகள் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.



Next Story