கோயில் உண்டியலை உடைக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்


கோயில் உண்டியலை உடைக்க முயன்ற இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள்
x

புதுக்கோட்டையில் கோயில் உண்டியலில் திருட முயன்ற இளைஞரை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டையில், கோயில் உண்டியலில் திருட முயன்ற இளைஞரை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மனேஞ்சிபட்டியை சேர்ந்த திவகார் என்ற இளைஞர், கந்தவர்க்கோட்டை அரியணிபட்டியில், சித்ரா என்பவர் வீட்டில் புகுந்து 2 சவரன் தங்கச் சங்கிலி, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை லாவகமாக திருடிச் சென்றுள்ளார்.

போகும் வழியில் புனல்குளம் என்ற கிராமத்தில், கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற அவரை, பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து இளைஞரைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story