மாநில அரசுக்கான உரிமையில் தான் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளோம்: அமைச்சர் ரகுபதி


மாநில அரசுக்கான உரிமையில் தான் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளோம்: அமைச்சர் ரகுபதி
x
தினத்தந்தி 20 July 2023 8:17 AM GMT (Updated: 20 July 2023 8:33 AM GMT)

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.

சென்னை,

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு வாதிட்டது தவறானது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு விதிகள் தான் கொண்டு வந்ததே தவிர சட்டம் எதுவும் இயற்றவில்லை என ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.

மேலும், ஆன்லைன் கேம் வேண்டாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும், தி.மு.க. சார்பாக நீதிமன்றத்தில் வாதாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story