பிரதமரிடம் வைத்த கோரிக்கைகள் என்ன? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பிரதமரிடம் வைத்த கோரிக்கைகள் என்ன? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

பிரதமர் மோடியின் முன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.

சென்னை,

பிரதமர் மோடி இன்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார். இதில் பேசிய அவர் பிரதமர் மோடியின் முன் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.

இந்த நிலையில் தான் வைத்த கோரிக்கைகள் குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிஅவர்களிடம், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகத் தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி கோரிக்கைகள் வைத்தேன். அவற்றை நிச்சயம் பரிசீலித்து நிறைவேற்றித் தருவார் என்று நம்புகிறேன்.

பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கைகள்:

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை 'கடுமையான இயற்கைப் பேரிடர்கள்' என அறிவித்து என்.ஆர்.டி.எப் -இல் இருந்து உரிய நிவாரண நிதி வழங்கிட வேண்டும்.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, வேலூர் விமான நிலைய விரிவாக்க மற்றும் நவீனமயமாக்கல் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

மதுரை விமான நிலையத்தைப் பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.

சென்னை - பினாங்கு, சென்னை - டோக்கியோ இடையே நேரடி விமான சேவையைத் தொடங்கிட வேண்டும்.

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பினை விரைந்து வழங்கிட வேண்டும்.

தமிழ்நாட்டில் என்.எச்.ஏ.ஐ செயல்படுத்தி வரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

இருவழிச் சாலையாக மாற்றப்படுகிற நெடுஞ்சாலைகளுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு,குறு நிறுவனங்களுக்கு பெல் நிறுவனம் அதிக அளவில் கொள்முதல்களை வழங்க வேண்டும், என்று பதிவிட்டுள்ளார்.


Next Story