பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகுமா..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை


பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகுமா..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை
x

கோப்புப்படம்

பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஏற்கனவே ஒருமுறை மாற்றப்பட்டு வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை எதுவும் வெளியிடுமா? என்ற எதிர்பார்ப்பில் சமூக வலைதளங்களில் பலரும் பல விதமான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளை மறுநாள் ( 7-ஆம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பல மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் நீடிப்பதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story