கோடைகாலம் தொடங்கிய நிலையில் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு 9 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது - 8 மாதத்துக்கு குடிநீர் தேவையை சமாளிக்கலாம்


கோடைகாலம் தொடங்கிய நிலையில் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு 9 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது - 8 மாதத்துக்கு குடிநீர் தேவையை சமாளிக்கலாம்
x

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு 9 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது. இதனால் சென்னைக்கு 8 மாதத்துக்கு குடிநீர் தேவையை சமாளிக்கலாம்.

திருவள்ளூர்

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 5 ஏரிகளிலும் சேர்த்து மட்டும் 8.569 தண்ணீர் மற்றும் இருப்பு உள்ளது. நீர் இருப்பு 9 டி.எம்.சி. கீழ் குறைந்துவிட்டது. எனினும் ஏரிகளில் தற்போது உள்ள தண்ணீரை வைத்து இன்னும் 8 மாதத்துக்கு சென்னையில் சப்ளை செய்ய முடியும். எனவே வரும் நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும்.

மேலும் கிருஷ்ணாநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் பெற முடியும் என்பதால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூண்டி எரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. இதில் 1.735 டி. எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1.081 டி.எம்.சி.யில் 818 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 3.300 டி.எம்.சி.யில் 2.403 டி.எம்.சி.யும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3.645 டி.எம்.சி.யில் 3.133 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்ட ஏரியின் அதன் மொத்த கொள்ளளவு ஆன 500 மில்லியன் கன அடி முழுவதும் நிரம்பிக் காணப்படுகிறது.


Next Story