மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
x

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.

திருவள்ளூர்

சென்னை ஆவடி நந்தனம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ஜமுனா (வயது 48). திருவள்ளூர் பூங்கா நகரில் ஜமுனாவின் உறவினர் கடந்த 25-ந் தேதியன்று காலமானார். அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜமுனா தனது மகன் பிரசாந்த் (வயது 25) என்வருடன் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூருக்கு வந்தார்.

பின்னர் அவர்கள் துக்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மீண்டும் ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தனர். ராமாபுரம் சாலையில் வரும்போது வேகத்தடையின் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. அப்போது பின்னால் அமர்ந்திருந்த ஜமுனா நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ஜமுனா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story