சிவகாசி அருகே தொழிலாளி திடீர் சாவு


சிவகாசி அருகே தொழிலாளி திடீர் சாவு
x

சிவகாசி அருகே தொழிலாளி திடீரென இறந்தார்.

விருதுநகர்

ராஜபாளையம் பூபாலன் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் காமராஜ் (வயது 26). இவர் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று சரவணன் என்பவருடன் வச்சகாரப்பட்டி கிராமத்தில் வெல்டிங் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடனே சரவணனிடம் ரூ.200 வாங்கி கொண்டு வச்சக்காரப்பட்டியில் இருந்து ராஜபாளையம் திரும்பினார். பஸ் எரிச்சநத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென உடல்நிலை மிகவும் மோசமானது. அதனைத் தொடர்ந்து பஸ் கண்டக்டரிடம் தன்னை எரிச்சநத்தம் பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடும்படி கூறியுள்ளார். பின்னர் அங்கிருந்து ஆட்டோ மூலம் எரிச்சநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முதலுதவி பெற்றுள்ளார். அப்போது திடீரென காமராஜ் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், காமராஜ் இறந்ததாக கூறினர். இதைத்தொடர்ந்து அவரது உடல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story