தொழிலாளி தவறி விழுந்து சாவு


தொழிலாளி தவறி விழுந்து சாவு
x

தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கரூர்

சேலம் மாவட்டம், மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவர் கடந்த 3 மாதமாக வெள்ளியணையில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஓட்டலை ஒட்டியுள்ள பேக்கரி கடைக்கு சாப்பாடு பார்சல் கொடுத்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே சேகர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story