மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2023 6:45 PM GMT (Updated: 7 Jun 2023 6:46 PM GMT)

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று இம்பிரீயல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து, அதில் வந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சிதம்பரத்தை சேர்ந்த பாண்டுரங்கன் (வயது 33) என்பதும், லாரன்ஸ் சாலையில் நிறுத்தியிருந்த நடுவீரப்பட்டை சேர்ந்த ராஜசேகரன் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.


Next Story