பெருவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 10 பேர் சாவு


பெருவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 10 பேர் சாவு
x

பெரு நாட்டில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

லிமா,

தென்அமெரிக்க நாடான பெருவில் ஹூவான்கோ நகரில் இருந்து தலைநகரான லிமாவுக்கு அதிகாலை ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அங்குள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள ரிமாக் ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சுக்குள் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

10 பேர் பரிதாப சாவு

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று பஸ்சுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பலி எண்ணிக்கை உயரலாம்

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்துக்கான காரணம் என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story