நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்; மக்கள் அதிர்ச்சி


நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்; மக்கள் அதிர்ச்சி
x

நேபாளத்தில் காத்மண்டு நகரில் இருந்து வடமேற்கே 169 கி.மீ. தொலைவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

காத்மண்டு,

நேபாளத்தில் ரிக்டரில் 6.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. இதனால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர்.

இந்த நிலநடுக்கத்தில், ருகும் மேற்கு பகுதியில் 36 பேரும், ஜஜர்கோட் பகுதியில் 34 பேரும் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் நிலநடுக்க பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இரங்கலை வெளிப்படுத்தினார். நிலநடுக்க பாதிப்பு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்து உள்ளது. இந்நிலநடுக்கம், டெல்லி-என்.சி.ஆர்., உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய வடஇந்திய பகுதிகளிலும் உணரப்பட்டது. நேபாள நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.38 மணியளவில் நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது ரிக்டரில் 3.6 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் காத்மண்டு நகரில் இருந்து வடமேற்கே 169 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.


Next Story