பிரேசில்: நடு வானில் வெடித்து சிதறிய விமானம் - 5 பேர் பலி


பிரேசில்: நடு வானில் வெடித்து சிதறிய விமானம் - 5 பேர் பலி
x

கனமழை காரணமாக திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானது.

மினாஸ் ஜெரைஸ்,

பிரேசிலில் மினாஸ் ஜெரைஸ் என்ற மாகாணம் உள்ளது. இங்கிருந்து ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் இட்டாபேவா என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அங்கு புயலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை விமானம் இழந்தது. இதனால் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

உடனடியாக விமானத்திலிருந்து கடைசியாக சிக்னல் கிடைத்த இடத்துக்கு மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் விமானம் நடுவானிலேயே வெடித்து சிதறியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story