கொலம்பியா சிறையில் தீ: 49 கைதிகள் உடல் கருகி சாவு
கொலம்பியா சிறையில் தீ விபத்தில் 49 கைதிகள் உடல் கருகி பலியாகினர்.
போகோடா,
கொலம்பியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள துலுவா நகரில் பெரிய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இந்த கலவரத்தின்போது சிறையில் தீப்பற்றியது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண் இமைக்கும் நேரத்தில் சிறை முழுவதிலும் பரவியது. இதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 49 கைதிகள் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story