பெரு அதிபர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்... போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே கடும் மோதல்


பெரு அதிபர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்... போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே கடும் மோதல்
x

காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்டனர்.

லிமா,

பெரு அதிபர் டீனா பொலுவார்டே பதவி விலகக் கோரி தலைநகர் லிமாவில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் அதிபர் காஸ்டில்லோ பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதே போராட்டங்கள் துவங்கின.

போலீசாரின் அடக்குமுறையால் ஏராளமான போராட்டக்காரர்களால் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் தினம் தினம் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் லிமாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள் போலீசார் இடையே பெரும் மோதல் வெடித்தது.

காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


Next Story