பிரேசிலில் போதை பொருள் கடத்தல் கும்பல் தாக்குதல்; 9 பேர் பலி


பிரேசிலில் போதை பொருள் கடத்தல் கும்பல் தாக்குதல்; 9 பேர் பலி
x

பிரேசிலில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையேயான மோதலில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் தீ வைத்து, எரித்து படுகொலை செய்யப்பட்டனர்.

சால்வடார்,

பிரேசிலின் வடகிழக்கில் பாகியா மாகாணத்தில் சால்வடார் நகரில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் அந்த கும்பலை சேர்ந்த மர்மநபர்கள் அருகருகே அமைந்துள்ள 2 வீடுகளுக்கு உள்ளே புகுந்து அவற்றை சூறையாடினர்.

இதில், 9 பேர் தீ வைத்து, எரித்து படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் 3 பேர் குழந்தைகள். 2 பேரின் உடல்கள் பகுதியளவும், 5 பேரின் உடல்கள் முற்றிலும் எரிந்து விட்டன. 2 பேருக்கு தீயால் காயம் எதுவும் ஏற்படவில்லை. படுகாயம் அடைந்த ஒரு சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் பாகியா மாகாணத்தில் 6,600 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இது அந்நாட்டில் 2-வது மிக பெரிய எண்ணிக்கை (1 லட்சம் பேருக்கு 47.1 சதவீதம்) ஆகும். தேசிய சராசரியை (1 லட்சம் பேருக்கு 23.4 சதவீதம்) விட இந்த எண்ணிக்கை அதிகம் ஆகும் என்று பிரேசிலின் பொது பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற என்.ஜி.ஓ. அமைப்பின் தகவல் தெரிவிக்கின்றது.


Next Story