சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு

சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
சாண்டியாகோ,
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் கடற்கரை நகரான அண்டோபகஸ்டாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நகரில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் 126 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, சிலியில் கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 526 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





