ஈரான் வழிபாட்டு தலத்தில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.பயங்கரவாதி சிகிச்சை பலனின்றி பலி


ஈரான் வழிபாட்டு தலத்தில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.பயங்கரவாதி சிகிச்சை பலனின்றி பலி
x

ஈரான் வழிபாட்டு தலத்தில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.பயங்கரவாதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டெஹ்ரான்,

ஈரான் நாட்டின் தென்மத்திய பகுதியில் அமைந்துள்ள ஷிராஸ் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தலம் உள்ளது. கடந்த 26-ந்தேதி இந்த வழிபாட்டு தலத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மற்றொரு பயங்கரவாதி தப்பி ஓடி விட்டார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 2 பயங்கரவாதிகளில் ஒருவர் இறந்துவிட்டதாக ஈரான் காவல்துறை தெரிவித்துள்ளது. கைது நடவடிக்கையின்போது காயமடைந்த அந்த பயங்கரவாதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உயிரிழந்த பயங்கரவாதி குறித்த கூடுதல் விவரங்களை காவல்துறை தெரிவிக்கவில்லை.


Next Story