இஸ்ரேல்-இந்தியா தொழில் ஒப்பந்தம்: 42 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்ற அனுமதி


இஸ்ரேல்-இந்தியா தொழில் ஒப்பந்தம்: 42 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்ற அனுமதி
x

42 ஆயிரம் இந்திய தொழிலாளர்களின் வருகையை அனுமதிக்கும் ஒப்பந்தங்களிலும் இஸ்ரேல்-இந்திய அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.

புதுடெல்லி,

இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி எலி கோகன், 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். தலைநகர் டெல்லியில் இரு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேசினர். அப்போது இந்திய-இஸ்ரேல் மந்திரிகள் பல்வேறு சூழல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கூடுதல் நேரடி விமானங்கள் இயக்குவது, வேளாண்மைத்துறை மற்றும் நீர்மேலாண்மை பற்றி விவாதித்தனர்.

கட்டுமானம் மற்றும் நர்சிங் துறைகளில் 42 ஆயிரம் இந்திய தொழிலாளர்களின் வருகையை அனுமதிக்கும் ஒப்பந்தங்களிலும் அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.


Next Story