இஸ்ரேல் தாக்குதலில் 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி: சர்வதேச நாடுகள் தலையிட கோரிக்கை


இஸ்ரேல் தாக்குதலில் 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலி: சர்வதேச நாடுகள் தலையிட கோரிக்கை
x

அக்டோபர் 7ஆம் தேதி முதல் காசாவில் 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா,

காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் பலியானது தெரிய வந்துள்ளது. பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் அமைப்பு இத்தகவலை தெரிவித்தது.

அந்த அமைப்பு மேலும் கூறியதாவது:-

இஸ்ரேல் விமான தாக்குதல்களில், 50 உள்ளூர், சர்வதேச ஊடக அமைப்புகள் குறிவைக்கப்பட்டன. 11 பத்திரிகையாளர்கள் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர். போர் குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 பத்திரிகையாளர்களை காணவில்லை.

காசா பகுதியில் நிலவும் மின்தடை மற்றும் இணையதள பிரச்சினையால் பத்திரிகையாளர்கள் சரிவர செயல்பட முடியவில்லை. சமூக வலைத்தளங்களில் பத்திரிகையாளர்களுக்கு இஸ்ரேல் அச்சுறுத்தல் விடுக்கிறது. இப்பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்.

இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


Next Story