ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு.. வீடுகள் மண்ணில் புதைந்தன: 5 பேர் உயிரிழப்பு


ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு.. வீடுகள் மண்ணில் புதைந்தன: 5 பேர் உயிரிழப்பு
x

கட்டிட இடிபாடுகளில் சுமார் 25 பேர் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. நேற்று இரவு நூரிஸ்தான் மாகாணம், நூர்கிராம் மாவட்ட மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மதிய நிலவரப்படி 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 25 பேரைக் காணவில்லை என்றும் மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள நூரிஸ்தான் மாகாணம், பெரும்பாலும் மலை மற்றும் காடுகளால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story