பிரான்சில் ஆலயங்களில் தீ வைத்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை


பிரான்சில் ஆலயங்களில் தீ வைத்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை
x

கோப்புப்படம்

பிரான்சில் ஆலயங்களில் தீ வைத்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பாரீஸ்,

பிரான்சின் மேற்கு பகுதியில் உள்ள நாண்டஸ் நகரத்தில் செயின்ட் பீட்டர் ஆலயம் மற்றும் செயின்ட் பால் ஆலயம் ஆகியவை உள்ளன. பிரசித்தி பெற்ற இந்த கிறிஸ்தவ ஆலயங்களில் கடந்த 2020-ஆம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ருவாண்டன் இம்மானுவேல் என்பவர் தீ வைத்து கொளுத்தினார். இதில் அந்த ஆலயங்களின் பெரும்பகுதிகள் சேதமடைந்தன.

இந்த வழக்கின் விசாரணை நடந்து முடிந்த நிலையில் தற்போது இம்மானுவேல் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானது. எனவே அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் நாண்டஸ் நகரில் வசிப்பதற்கும் இவருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர இவர் கடந்த 2021-ல் கத்தோலிக்க பாதிரியார் ஒருவரை கொன்றது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.


Next Story