சீனாவில் அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகள்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்


சீனாவில் அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகள்; நிரம்பி வழியும் மருத்துவமனைகள்
x

சீனாவிடம், இதுபற்றிய விரிவான, கூடுதல் விவரங்களை சமர்ப்பிக்கும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டது.

பீஜிங்,

கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து சீனா இன்னும் முழுமையாக விடுபடாத சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், புதிய வகை மர்ம காய்ச்சல் சீனாவை கடுமையாக பாதித்து வருகிறது.

இதனால், கல்வி நிலையங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. கொரோனா பெருந்தொற்றின் தொடக்க நிலைகளின்போது காணப்பட்ட அதே நிலைமை மீண்டும் ஏற்பட்டு உள்ளது.

இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகளில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து, தேசிய சுகாதார ஆணையத்தின் சுகாதார அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். அதில், அதிகரித்து வரும் சுவாச பாதிப்புகளை பற்றி எடுத்துரைத்தனர்.

இதில், லையானிங் மாகாணத்தில் தீவிர நிலைமை காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலருக்கு, குழந்தைகள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல மருத்துவமனைகளில் நோயாளிகள் வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. வகுப்புகள் தற்காலிக ரத்து செய்யப்பட்டன. தொற்று பரவலை அதிகாரிகள் மறைக்கிறார்களா? என பெற்றோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பீஜிங் மற்றும் லையானிங் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நிம்மோனியா வகை தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்றும் இதனால் தீவிர சுவாச கோளாறுகள் ஏற்பட்டு, சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்படும் என நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவிக்கின்றது.

இதுபற்றிய விரிவான, கூடுதல் விவரங்களை சமர்ப்பிக்கும்படி சீனாவிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டது. பொது சுகாதார அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளது. தனிநபர்கள், ஆபத்துகளை குறைத்து கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.


Next Story