சீனா-சிங்கப்பூர் இடையே விசா தேவையில்லை-இரு நாடுகளும் ஒப்புதல்


சீனா-சிங்கப்பூர் இடையே விசா தேவையில்லை-இரு நாடுகளும் ஒப்புதல்
x

Photo Credit: AFP

இந்த புதிய விதிகள் அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் இருநாட்டு அதிகாரிகள் தரப்பிலும் கூறப்படுகிறது.

பீஜிங்,

சீனர்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். இந்த இரு நாடுகளும் நீண்ட காலமாகவே நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. இந்தநிலையில் தற்போது இரு நாடுகளும் தங்களது விசா நடைமுறையில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அதன்படி இரு நாடுகள் இடையே செல்வதற்கு இனி விசா தேவையில்லை. சிங்கப்பூர் மற்றும் சீன மக்கள் தங்களது சாதாரண பாஸ்போர்ட் மூலம் பரஸ்பர நாடுகளில் 30 நாட்கள் வரை தங்கிக்கொள்ளலாம்.

இது அடுத்த மாதம் (பிப்ரவரி) 9-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இரு நாடுகளிடையே மக்கள் பரிமாற்றம் மற்றும் உறவுகள் மேலும் மேம்படும் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார்.


Next Story