தைவான் அதிபர் தேர்தல்: சீன ராணுவம் பகிரங்க மிரட்டல்


தைவான் அதிபர் தேர்தல்: சீன ராணுவம் பகிரங்க மிரட்டல்
x

தைவானில் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

தைபே,

கிழக்கு ஆசியாவில் பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு தைவான். சீனாவுக்கு அருகே அமைந்துள்ள இந்நாட்டை தனிநாடாக சீனா அங்கிகரிக்கவில்லை. மேலும், தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்றும் சீனா கூறி வருகிறது.

இதனிடையே, தைவானில் 4 ஆண்டுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் ஆட்சியில் உள்ள ஜனநாயக முற்போக்கு கட்சி சார்பில் லை சிங் டி அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து சீனா ஆதரவு பெற்ற தேசியவாத கட்சியை சேர்ந்த ஹவ் யொ-ஹி அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அதேபோல், தைவான் மக்கள் கட்சியை சேர்ந்த கோ வென் ஜி என்பவரும் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சி வேட்பாளர் லை சிங் டி வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தைவான் அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சீன ராணுவம் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக சீன பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், சீன மக்கள் விடுதலை ராணுவம் எல்லா நேரமும் மிகுந்த விழிப்புடன் உள்ளது. தைவான் சுதந்திர முயற்சிகள் அனைத்தையும் முற்றிலும் முறியடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்' என்றார்.


Next Story