ஐ.நா. பொதுசபையில் இந்தி உள்ளிட்ட மொழிகளின் பயன்பாடு - இந்தியா முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றம்


ஐ.நா. பொதுசபையில் இந்தி உள்ளிட்ட மொழிகளின் பயன்பாடு - இந்தியா முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றம்
x

ஐ.நா. பொதுசபையில் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் பயன்பாடு தொடர்பாக இந்தியா முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெனீவா,

193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றம. இந்த 6 மொழிகள் தவிர இதர மொழிகளிலும் ஐ.நா.வின் அறிக்கைகள், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 80 நாடுகள் சார்பில் ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த தீர்மானம் நேற்றைய தினம் ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்டது. பன்மொழி பயன்பாட்டை முன்மொழியும் இந்த தீர்மானத்தில் இந்தி, உருது மற்றும் வங்க மொழி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்திய அரசு இதனை வரவேற்பதாக ஐ.நா.விற்கான இந்திய தூதுவர் டி.எஸ்.திருமூர்த்தி கூறியுள்ளார். பன்மொழி பயன்பாடு என்பது ஐ.நா.வின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்காக ஐ.நா. பொதுச்செயலாளருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

அரபு மொழி, சீன மொழி, பிரெஞ்ச் மொழி, ஸ்பானிஷ் மொழி, ரஷிய மொழி மற்றும் ஆங்கில மொழி ஆகிய 6 மொழிகள் ஐ.நா. பொதுசபையின் அதிகாரப்பூர்வ மொழிகளாகவும், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகள் ஐ.நா. தலைமை செயலகத்தின் அலுவல் மொழிகளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story