ஜப்பானில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி...!


ஜப்பானில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி...!
x

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ள நிலையில் அங்கு மகாத்மா காந்தி சிலையை திறந்துவைத்தார்.

டோக்கியோ,

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகள் ஜி7 என்று அழைக்கப்படுகிறது.

இதனிடையே, இந்த ஆண்டுக்கான ஜி7 மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜி7 நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர்.

அதேவேளை, ஜப்பான் பிரதமரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடியும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றுள்ளார்.

இந்நிலையில், ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு மகாத்மா காந்தி உருவ சிலையை திறந்துவைத்தார். ஹிரோஷிமாவில் இன்று காந்தி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

காந்தி சிலையை திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் வந்துள்ளபோது மகாத்மா காந்தி சிலையை திறந்து வைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹிரோஷிமாவில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலை அமைதி பாதைக்கு அழைத்து செல்லும்' என்றார்.


Next Story