காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் அர்த்த மண்டபத்துக்கு வெள்ளிக்கதவு காணிக்கை


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் அர்த்த மண்டபத்துக்கு வெள்ளிக்கதவு காணிக்கை
x

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் மூலவர் கருவறையில், துவாரக பாலகர்கள் நின்றருளும் அர்த்த மண்டபத்திற்கு புதிய வெள்ளிக் கதவு பொருத்தப்பட்டுள்ளது.

காஞ்சீபுரத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், அத்திவரதர் கோவில் என்று அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் வரதராஜ சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மூலவர் வரதராஜ பெருமாள் அருள் பாலித்து வரும் கருவறைக்கு வெளியே துவாரக பாலகர்கள் நின்றருளும் அர்த்த மண்டபத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் கிரிதர் குடும்பத்தினர் தங்களது வேண்டுதலின்படி வெள்ளி கதவு செய்து வழங்க கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றனர்.

அதன்படி ரூ.35 லட்சம் செலவில் பழமை மாறாமல் செய்யப்பட்ட 7 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட மரக்கதவுக்கு பல்வேறு விதமான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய 32 கிலோ எடை கொண்ட வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்ட புதிய கதவை செய்து கோவில் கருவறை அர்த்த மண்டபத்தில் பொருத்தி நன்கொடையாக வழங்கினார்கள்.

கோவில் கருவறை அர்த்த மண்டபத்தில் புதிதாக பொருத்தப்பட்ட வெள்ளி கதவுக்கு கோவில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து வெள்ளி கதவை திறந்து வைத்தனர். அதன் பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

கோவில் கருவறை அர்த்த மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெள்ளி கதவை திரளான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு, வரதராஜ பெருமாளை வணங்கி வழிபட்டு சென்றனர்.


Next Story