சபரிமலையில் மண்டல பூஜை: முதல்முறையாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை


சபரிமலையில் மண்டல பூஜை: முதல்முறையாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை
x

பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர்.

சபரிமலை,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த நிலையில், சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27- ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி, பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1.63 லட்சம் பேர் மலை ஏறி உள்ளனர்.

மண்டல கால பூஜையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளது இதுவே முதல்முறையாகும். தற்போது 15 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர்.


Next Story