ஆன்மிகம் அறிவோம்..


ஆன்மிகம் அறிவோம்..
x

மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஆன்மீகம்.

* தந்தை சிவனுக்கு, முருகன் உபதேசம் செய்த இடம் - சுவாமிமலை.

* திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் - சீர்காழி.

* சூரபதுமனுடன் போரிட்டு, முருகப்பெருமான் வென்ற இடம் - திருச்செந்தூர்.

* நக்கீரரால் இயற்றப்பட்ட திருமுருகாற்றுப்படை என்ற நூலில், அடிகளின் எண்ணிக்கை - 317.

* அபிராமிபட்டர் பிறந்த ஊர் - திருக்கடவூர்.

* 'கணபதி' என்பதன் பொருள் - 18 கணங்களின் தலைவன்.

* 'விநாயகர் அகவல்' என்னும் நூலை இயற்றியவர் - அவ்வையார்.

* 'பிரணவ மந்திரம்' என்று சிறப்பித்து கூறப்படும் மந்திரம் - ஓம்.

* 'பஞ்சாட்சர மந்திரம்' என்று சிறப்பித்து கூறப்படும் மந்திரம் - நமசிவய.

* முருகப்பெருமானின் ஆறு எழுத்து மந்திரம் - சரவணபவ.

* தமிழகத்தில் சித்திரகுப்தன் கோவில் உள்ள ஊர் - காஞ்சிபுரம்.

* பன்றி இறைச்சியை சிவபெருமானுக்கு படைத்த வேடன் - கண்ணப்ப நாயனார்.

* ஆண்டாள் இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பு - திருப்பாவை.

* பட்டினத்தார் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் - திருவொற்றியூர்.

* காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த திருத்தலம் - திருவாலங்காடு.

* பெரிய புராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 4287.

* திருவாசகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை -659.

* குதிரை மீது அமர்ந்த முருகப்பெருமானை தரிசிக்கக் கூடிய ஒரே தலம் - மருதமலை.


Next Story