திருப்பதியில் இன்று கார்த்திகை வனபோஜன உற்சவம்


திருப்பதியில் இன்று கார்த்திகை வனபோஜன உற்சவம்
x

ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே வைபவ உற்சவ மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த உற்சவம் வழக்கமாக கோகர்பம் அணை அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் நடக்கும். ஆனால், தற்போது மழைப் பெய்து வருவதாலும், புயல் உருவாகி உள்ளதாலும் வைபவ உற்சவ மண்டபத்தில் நடத்தப்படுகிறது.

இன்று காலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை வைபவ உற்சவ மண்டபத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கு காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணிக்குள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பிறகு கார்த்திகை வனபோஜன உற்சவம் நடத்தப்பட்டு, அங்கிருந்து உற்சவர்களை கோவிலுக்கு கொண்டு வருகிறார்கள்.

கார்த்திகை வனபோஜன உற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோவிலில் இன்று நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டன.


Next Story