ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்: பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.
மொகாலி,
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று இருக்கிறது. மும்பை அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 188 ரன் இலக்கை எட்டிப் பிடித்து அசத்தல் வெற்றி பெற்றது அந்த அணிக்கு புத்துணர்ச்சியை அளித்து இருக்கும். அந்த ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் 89 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோரும் அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத பென் ஸ்டோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வருகை ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
பஞ்சாப் அணிக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் வெற்றி பாதைக்கு திரும்ப பஞ்சாப் அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
Related Tags :
Next Story