5-வது டெஸ்ட்; இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒரு மாற்றத்துடன் விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து


5-வது டெஸ்ட்; இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒரு மாற்றத்துடன் விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து
x

image courtesy: ICC

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

தர்மசாலா,

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் தொடங்க உள்ளது.

இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்த டெஸ்டின் மூலம் கிடைக்கும் புள்ளி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். எனவே இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அறிவித்துள்ளது. அதில் ஒரே ஒரு மாற்றமாக கடந்த போட்டியில் விளையாடிய ஒல்லி ராபின்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு;-

ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர்.


Next Story