மிட்சேல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் அதிரடி.. வங்காளதேசத்திற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


மிட்சேல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித் அதிரடி.. வங்காளதேசத்திற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
x

ஆஸ்திரேலிய அணி 44.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்தது.

புனே,

இந்தியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மராட்டிய மாநிலம் புனேவில் இன்று ஆஸ்திரேலியா வங்காளதேசம் இடையேயான ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடி ஓரளவு ரன் சேர்த்தனர். முதல் விக்கெட்டிற்கு 76 ரன்கள் சேர்த்தனர். அதனை தொடர்ந்து டவுஹிட் ஹிர்டாய் அடித்த அரைசதம் மற்றும் அடுத்தடுத்து வந்த வீரர்களால் வங்காளதேச அணி 300 ரன்களை கடந்தது.

இறுதியாக 50 ஓவர் முடிவில் வங்காளதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய தவுஹித் ஹிர்டாய் அதிகபட்சமாக 74 ரன்களும், கேப்டன் நஜ்முல் ஹூச்சைன் 45 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஆடம் சம்பா, சீன் அப்போட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

தொடர்ந்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இதில் டிராவிஸ் ஹெட் 10 ரன்களில் அவுட்டாகி வெளியாற, அடுத்த விக்கெட்டுக்கு மிட்சேல் மார்ஷ் களமிறங்கினார்.

அரை சதம் விளாசிய வார்னர் 53 ரன்களில் கேட்ச் ஆனார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித்- மிட்சேல் மார்ஷ் ஜோடி அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியாக 44.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 307 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிட்சேல் மார்ஷ்(177) மற்றும் ஸ்டீவ் ஸ்மித்(63) இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.


Next Story