டக் அவுட்டான சுப்மன் கில்....விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்


டக் அவுட்டான சுப்மன் கில்....விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்
x

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

ஐதராபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நேற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட அபாரமாக செயல்பட்டு 190 ரன்கள் முன்னிலை பெற்றதால் கண்டிப்பாக இந்திய அணி வெல்லும் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால் 2வது இன்னிங்சில் ஒல்லி போப் 196 ரன்கள் அடித்ததை பயன்படுத்திய இங்கிலாந்து 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய இந்தியா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது.

முன்னதாக இந்த தோல்விக்கு இரண்டாவது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக செயல்பட்டது முக்கிய காரணமானது. குறிப்பாக சமீப காலங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 23 ரன்களில் அவுட்டான நிலையில் முக்கியமான 2வது இன்னிங்சில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

இந்நிலையில் முதல் இன்னிங்சில் பவுண்டரி ஷாட்டுகளை அடிப்பதற்கு சுப்மன் கில் முயற்சிக்கவில்லை என இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் விமர்சித்துள்ளார். அதை விட 2வது இன்னிங்சில் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றுவதற்கு கூட கில் தடுமாறியதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு.

"முதல் இன்னிங்சில் சுப்மன் கில் பேட்டிங் செய்த அணுகுமுறையை நாம் பார்த்தோம். அவர் நல்ல ஷாட்டுகளை அடிப்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அப்படி நீங்கள் ரன்கள் அடிக்க முயற்சிக்கவில்லை எனில் சர்வதேச கிரிக்கெட்டில் எதிரணி பவுலர்கள் எளிதாக அடிப்பதற்கு தேவையான சுமாரான பந்துகளை உங்களுக்கு வீச மாட்டார்கள். நீங்கள் அங்கே உங்களுடைய திறமையை காண்பிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் பவுண்டரிகளை அடிக்க முயற்சிக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்ற வேண்டும். எனவே அதில் எப்படி முன்னேறலாம் என்பதை அவர் பார்க்க வேண்டும்" என்று கூறினார்.


Next Story