முதல் டி20 போட்டி: ஆஸி.க்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு


முதல் டி20 போட்டி: ஆஸி.க்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 23 Nov 2023 1:09 PM GMT (Updated: 23 Nov 2023 1:23 PM GMT)

இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினம்,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார்.

இரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் முதல் டி20 போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story