பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு


பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு
x
தினத்தந்தி 14 Oct 2023 4:00 PM GMT (Updated: 14 Oct 2023 4:00 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்,

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

இந்திய அணியின் வெற்றிக்கு பாதை அமைத்து கொடுத்தவர்கள் பந்துவீச்சாளர்கள் தான். நிச்சயம் இந்த ஆடுகளம் 190 ரன்கள் சேர்க்கக் கூடியது அல்ல. பாகிஸ்தான் அணியினர் ஒரு கட்டத்தில் 280 ரன்கள் சேர்ப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டது பெருமை அளிக்கிறது.

ஒரு கேப்டனாக எனது பொறுப்பும் களத்தில் முக்கியமானது. பிட்சின் தன்மையை சரியாக கணித்து எந்த வீரர் பணியை கச்சிதமாக முடிப்பார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

அனைத்து நாட்களிலும் எல்லோராலும் சிறப்பாக செயல்பட முடியாது. ஒவ்வொரு நாளும் வேறு வேறு வீரர்களின் நாளாக இருக்கும். ஷர்துல் தாக்கூருக்கு 2 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதற்கு அதுதான் காரணம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதால், பெரிதாக கொண்டாட தேவையில்லை. அதேபோல் சோகமடையவும் தேவையில்லை. அடுத்த இலக்கை நோக்கி நடக்க வேண்டிய நிலை உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு அணியும் தரமான அணிகள் தான்" இவ்வாறு கூறினார்.


Next Story