ஐ.பி.எல். கிரிக்கெட்: 26 பந்துகளில் அரைசதம் - ஜெய்ஸ்வால் அதிரடி


ஐ.பி.எல். கிரிக்கெட்: 26 பந்துகளில் அரைசதம் - ஜெய்ஸ்வால் அதிரடி
x
தினத்தந்தி 27 April 2023 3:18 PM GMT (Updated: 27 April 2023 3:27 PM GMT)

தொடக்கம் முதல் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 26 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார்.

ஜெய்ப்பூர்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரின் 37-வது லீக் ஆட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். தொடக்கம் முதல் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் பவுண்டரிகள், சிக்ஸர்களை பறக்கவிட்டு 26 பந்துகளில் அரைசதம் விளாசினார். மறுபுறம் ஜாஸ் பட்லரின்(27 ரன்கள்) விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். தனது அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ரசிகர்களை குஷிப்படுத்திய ஜெய்ஸ்வால் 43 பந்துகளில் 77 ரன்கள்(8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) குவித்து ஆட்டமிழந்தார்.


Next Story