ஐ.பி.எல்; பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல்; பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு
x

Image Courtesy: Twitter 

இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டனாக சாம் கர்ரன் செயல்பட உள்ளார்.

முல்லன்பூர்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று முல்லன்பூரில் நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் - சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி முதல் இடத்திலும், பஞ்சாப் அணி 8வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளும் தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சி செய்வதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டனாக சாம் கர்ரன் செயல்பட உள்ளார்.


Next Story