கடைசி டெஸ்ட்: முதல் நாள் தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 149-2


கடைசி டெஸ்ட்: முதல் நாள் தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 149-2
x

ஆஸ்திரேலிய அணி முதல் நாள் தேநீர் இடைவேளை வரை 62 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

அகமதாபாத்,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். லபுஸ்சேன் 3 ரன்களில் அவுட்டானார்.

ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி முதல் நாள் தேநீர் இடைவேளை வரை 62 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா 65 ரன்களுடனும் கேப்டன் ஸ்டீவன் சுமித் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் முகமது ஷமி மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.


Next Story